நிதி நிலையான வைப்பில் இடல் தொடர்பானது யா/மாதகல் நுணசை வித்தியாலய நிறுவுனர், வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகளுக்காக திரு. வை.தில்லை நாதன் ...
நிதி நிலையான வைப்பில் இடல் தொடர்பானது
யா/மாதகல் நுணசை வித்தியாலய நிறுவுனர், வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகளுக்காக திரு. வை.தில்லை நாதன் ஐயா
(ஸ்தாபகர் குடும்பம் இலண்டன் )
27.05.2026 தமது குடும்பம் சார்பாக 1500000/= ருபா பெறுமதியான பணத்தொகையை பாடசாலை அபிவிருத்திச் சங்க நிலையான கணக்கில் வைப்பில் இட்டு அதில் பெறப்படும் வட்டிப் பணத்தை வைத்து வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகளை நடத்துமாறு அன்பளிப்பு செய்துள்ளார். உண்மையில் பல்வேறு இடர்பாடுகள் மத்தியிலும் மிகவும் பெறுமதி வாய்ந்த உயரிய உதவியை வழங்கியுள்ளார்
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
பாடசாலை சமூகம் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது தொடர்சியான சேவைகள் கிடைக்க இறையாசி வேண்டுகிறேன்.
அத்துடன் இந்த உதவியை செய்ய முழுமையாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்கிய பழைய மாணவர்களாகிய அன்பழகன் அண்ணா(ஜேர்மனி ), கணேஷ் அண்ணா(வவுனியா) அவர்களுக்கும் மற்றும் இந்திரன் ஐயாவுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
.jpeg)
.jpeg)
.jpeg)
