மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா- 2025 மாதகல் புனித அந்தோனியார் ஆலய 2025ம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழாவின் தொடக்க நாளாகிய...
மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா- 2025
தினமும் மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.
12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
13.06.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருவிழாத் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருச்சுருபப் பவனியும் இறுதியில் திருச்சுருப ஆசீரும் நடைபெறும்.
புனிதரின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீரைப் பெற்று வாழ அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.