பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், புலமைப்பரீட்சையில் [5ஆம் வகுப்பு....
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், புலமைப்பரீட்சையில் [5ஆம் வகுப்பு. - 2024] கல்விகற்று சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்புவிழா 18ஆவது வருடமாக - செவ்வாய் 13-05-2025 மாலை நேரம் 3மணியளவில் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
விக்னேஸ்வரா பாடசாலையின் 7 மாணவர்களிற்கும், சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 1 மாணவனிற்கும் பாராட்டுப் பட்டயங்கள் வழங்கி கௌரவித்ததுடன் , ஒவ்வொரு மாணவரிக்கும் 10,000ரூபாவிற்குரிய வங்கி வைப்புத்துண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச உறுப்பினர்கள், எமது சங்க அங்கத்தவர்கள் பலர் மாதகலிறகு விடுமுறையில் சென்ற போது கலந்து கொண்டனர்.
