டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், G.C.E.O.L. வகுப்புகளிற்கான மேலதிக ...
டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், G.C.E.O.L. வகுப்புகளிற்கான மேலதிக வகுப்புக்களில் பங்குபற்றி, [10ஆம் வகுப்பு. - 2024] கல்விகற்று சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்பு விழா முதலாவது வருடமாக செவ்வாய் 13-05-2025 மாலை நேரம் 3மணியளவில் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் மாணவர்களிற்கு சிறிய ஊக்குவிப்புத் தொகையாக, பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த மேலதிக வகுப்புக்களை நடாத்தவும், கௌரவிப்பு விழாவிற்குமென 2,25,000ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கியது.
இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச உறுப்பினர்கள், பிரான்ஸ் மாதகல் நலன்புராச் சங்க அங்கத்தவர்கள் பலர் மாதகலிறகு விடுமுறையில் சென்ற போது கலந்து கொண்டனர்.