கடற்கரைகளை சுத்தம் செய்து அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைவாக 24.04.2025 இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் பிரதேச செயலாளர் தலமையில்...
கடற்கரைகளை சுத்தம் செய்து அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைவாக 24.04.2025 இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் பிரதேச செயலாளர் தலமையில் மாதகல் கிழக்கு லூர்த்து கெவி ஆலய கடற்கரைப் பகுதியில் "கடற்கரையோரம் சுத்தப்படுத்தல்" செயற்பாடு இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்புத்திணைக்கள உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், கடற்றொழில் அமைப்புக்கள்,கடற்றொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.