விசுவாசிகளை நல்லமுறையில் வழிநடத்தி மறைந்த திருத்தந்தைக்காக புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் அவரது இருப்பை நினைவுகூறும் முகமாக ஆலயமணி ஒலி எழுப...
விசுவாசிகளை நல்லமுறையில் வழிநடத்தி மறைந்த திருத்தந்தைக்காக புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் அவரது இருப்பை நினைவுகூறும் முகமாக ஆலயமணி ஒலி எழுப்பப்பட்டு திருத்தந்தையின் உருவம் தாங்கிய வாறு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு திருத்தந்தைக்காக செபித்து நின்றதன் பதிவுகள்..
புனித வாரத்தின் பெரிய வெள்ளி அன்று காலை வழிபாடுகள்மூலம் யேசுவின் பாடுகள் மரணம் என்பனவற்றை தியானிக்கும் வகையிலான சிலுவைப்பாதையினை முன்நின்று நடாத்திய புனித ஹென்றி அரசர் கல்லூரியின் அதிபர் அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய மைக்மயூரன்அடிகளாருக்கும்.இவ்வழிபாட்டினை ஒழுங்கு படுத்திய பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளார்கட்கும். வழிபாட்டில் பாடல்களை பாடி தியானிக்க உதவி செய்த புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் பாடகர் குழாமினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
சதாசகாய அன்னை ஆலயத்தில் தவக்காலத்தினை தியானிப்பதற்காக யேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மிரமாண்டமான யேசு சுமந்த சிலுவை.இதனை காட்சிப்படுத்துவதற்காக அயராது அற்பணிப்புடன் உழைத்த பங்கு தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும் இளைஞர்களுக்கும் நிர்வாகத்தகனர் அனைவர்க்கும் ஆலயம் சார்பாக நன்றி.
புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் இறைவனின் பாடுகள் மரணம் என்பனவற்றை தியானிக்கும் பெரிய வியாழன், பெரிய வெள்ளி வழிபாடுகளை புனித ஹென்றி அரசர் கல்லூரியின் அதிபர் அன்புக்கும் பெரும் மதிப்புக்குமுரிய மைக்மயூரன் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டு இறைமக்களை இறை விசுவாசத்தில் திடப்படுத்தினார்.
அடிகளார் அவர்களுக்கும் இவ் வழிபாடுகளை திறம்பட ஆயத்தம் செய்த மதிப்பார்ந்த பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் இறைசமூகமாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.