மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய சமூக சேவகன் திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் நிதிப்பங்...
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய சமூக சேவகன் திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் 22.01.2025 காலை 09:00 மணிக்கு சாந்தை சித்திரவிநாயகர் ஆலயத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/150, J/151, J/152 கிராம அலுவலர் பிரிவுகள் உட்பட 28 கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் சில பதிவுகள்... "சிறியதோர் ஆலம் வித்தீண்டி இறப்ப நிழல் பயத்தாற் போல"எனும் நாலடியாரின் கூற்றிற்கிணங்க தொடர்ந்து சமூகப் பணிகள் பல செய்துவரும் திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களுக்கு மாதகல் இணையத்தளம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிநிற்கின்றது..