பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 7ஆவது வருடாந்த நிகழ்வாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமுடாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் ஞாயிறு...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 7ஆவது வருடாந்த நிகழ்வாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமுடாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் ஞாயிறு 24-11-2024அன்று மழை, வெள்ளம் காரணமாக மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருமதி மதியழகன் சுபாஜினி அவர்கள்[வலி தென் மேற்கு பிரதேச செயலாளர், சண்டிலிப்பாய்] சிறப்பு விருந்தினராக ஜேர்மனியில் வசிக்கும் சமூக சேவகர் திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மற்றும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு குகரவீந்திரநாதன் [றவி] அவர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மாதகல் கிராமசபைகளின் அதிகாரிகள் , சென் யோசப் பாடசாலை அதிபர், விக்னேஸ்வரா பாடசாலை அதிபர், மாதகல் பங்குத்தந்தை அவர்கள், பாணாவெட்டி அம்மன் ஆலயக்குருக்கள் அவர்கள் மற்றும் பொதுமக்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள்[நெல்லி, தென்னை, கமுகு,மாதுளை, ஜம்பு, கொய்யா, எலுமிச்சை, தோடை, மாமரம், பலாமரம் என்பவை வழங்கப்பட்டது.
கடந்த ஆறு வரடங்களிலும் தொடர்ந்து மரங்களை பராமரித்து வருபவர்களிற்கு விசேட பரிசில்கள் வழங்கப்பட்டது.
பசுமையில் மாதகல் நிகழ்வு பற்றி மாதகல் பாடசாலை மாணவர்களிடையே கட்டுரைப்போட்டிகள் நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு ஜெறாட் அவர்கள் திறமையாக தொகுத்து வழங்கியிருந்தார்.
தொடர் மழை காரணமாக
மரக்கன்றுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன்,
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும்
"பசுமையில் மாதகல்"
திட்டத்தினூடாக 3 மாதகல் கிராமசபைகளில் வசிக்கும் மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 7ஆவது வருடமாகவும் ஞாயிறு 24-11-2024 அன்று காலை 9 மணி முதல்
இடம் : இலங்கை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை
முன்பதிவு செய்த போது வழங்கிய இலக்க அட்டையினை காட்டி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.
இந்த சிறிய திட்டத்தின் மூலம் பூமிப்பந்தின் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கு எமது கிராமமும் பங்களிப்பதென்பதில் எமது சங்கத்தின் கடமை என்பதை உணர்ந்து, பெருமை அடைகின்றது.