மாதகல் சிவன்கோவில் நடைபெற்ற குரோதி புது வருட விஷேட பூசை நிகழ்வுகள்...(காணொளி இணைப்பு)..!

மாதகல் சிவன்கோவில் 13.04.2024 அன்று இரவு 8.15 மணிக்கு நடைபெற்ற குரோதி புது வருட விஷேட பூசை நிகழ்வுகள்.


13.04.2025 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.
விஷு புண்ணிய காலம் - மருத்துநீர் வைக்கும் நேரம்:- 13.04.2024 பிற்பகல் 04.15 மணி முதல் பின் இரவு 12.15 (14.04.2024 - 12.15 am) மணி வரை.
மருத்துநீர் 13.04.2024 காலை 6.00 மணி முதல் வழங்கப்படும்.
இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.



 

கருத்துகள்