பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன், " மாதகல் பகலவன்" அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக, மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய பொங்கல் விழாவில், எமது சங்கத்தினை ஆரம்பிக்க காரணமானவரான  அமரர் "மாதகல் பகலவன்"  திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற  பாரம்பரிய விளையாட்டு நிகழ்வின் பதிவுகள் சில : 

(எமது சங்கத்தின் செயற்குழு முடிவுடன் 1,00,000ரூபா வங்கி மூலம் 10-01-2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டது)






















































































































































2024ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன், " மாதகல் பகலவன்" அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் கழக மைதானத்தில் 15.01.2024 இன்று மிகவும் சிறப்புற  இடம் பெற்றது.
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் சா.அருள்ஞானந்தன், செ. ஜெயக்குமார், பூ. அன்பழகன், தவராசா ஆகியோர் விருந்தினராக கலந்து சிறப்பித்தனர். சிறுவர்களுக்கான விளையாட்டுகள், முட்டி உடைத்தல், தலையணைச் சண்டை, சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல்,  கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல் என பல வகையான போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


 பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன், (செயற்குழு முடிவுடன் 1,00,000ரூபா வங்கி மூலம் 10-01-2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டது)  மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினுடாக, மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் தைப்பொங்கல் திருநாளில் 15-01-2024 அன்று , எமது சங்கத்தினை ஆரம்பிக்க காரணமானவரான , " மாதகல் பகலவன்" அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடத்தப்படும்" பாரம்பரிய விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்"

கருத்துகள்