கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் 30ஆம் ஆண்டு சேவையை கொண்டாடும் இயல், இசை, நாடகம் “முத்தமிழ் கலை மாலை”..!

கனடாவில் வாழும் அனைத்து மாதகல் மக்களும் நிகழ்வில் பங்கு கொண்டு ஆதரவு தருவதோடு எம் பிறந்த மண்ணையும் மக்களையும் வாழ வைப்போம் என ஒற்றுமையாய் உறுதி எடுப்போம். கலைநிகழ்வுகள் தரவிரும்புவோரும், விளம்பரதார்களும், விழாவுக்கு அனுசரனை வழங்குபவர்களும் கீழ் காணும் ஒன்றிய செயலவை உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகின்றோம்.

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய செயவவை இந் நிகழ்வில்

கனடா வாழ் மாதகல் மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.




கருத்துகள்