யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2022/2023ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கிவைப்பு..!

யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2022/2023ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி எய்திய இரு மாணவர்களுக்கு பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியின் வசிப்பவருமாகிய திரு பூ. அன்பழகன் அவர்கள் மேலும் மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் நிதியாக தலா ரூபா 5,000 வீதம் வழங்கிவைத்துள்ளார்.

இவர் வருடந்தோறும் சித்தி அடைந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரின் இச்சேவைதனை பாராட்டி நன்றிகளை கூறிநிற்கிறோம் .

கருத்துகள்